First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியாவுக்கு யுரேனியம் தர முடியாதென ஆஸ்திரேலியா அறிவிப்பு - தமிழக அமைச்சர் பெரியகருப்பன் விபத்தில் படுகாயம் - ரஜினிகாந்த்தின் எந்திரன் திரைப்பட ஷுட்டிங் அமெரிக்காவில் இன்று ஆரம்பம்: கதாநாயகி ஜஸ்வர்யாராய் - அணுசக்தி ஒப்பந்த இறுதி கையெழுத்திட மன்மோகன்சிங் அமெரிக்கா பயணம் - சன் டிவி இன்று முதல் காமெடித்திரை புதிய நகைச்சுவை டிவி சேனல் துவக்கம் - சென்னையில் 6000 பிள்ளையார்கள் கடலில் கரைப்பு - தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் - இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது: அப்துல் கலாம் உறுதி - ஒலிம்பிக் நாயகன் அபிநவ் பிந்தரேவுக்கு சென்னையில் டாக்டர் பட்டம்
புடவையில் வந்தார் நமீதா!
முதல்வர் விழாவில் அடக்கம்!

பெருமாள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதல்வர் Namitha-Kushbooகலைஞர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நமீதாவும், மீனாட்சியும் நடித்திருக்கிறார்கள்.

முதல்வரின் பேரனும், மு.க.முத்துவின் மகனுமாகிய அறிவுநிதி, 'காதல் வைபோகமே' என்ற பாடலை பாடியிருக்கிறார். சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலின் ரீமிக்ஸ் இது. திரையுலக பிரபலங்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட விழாவில் ஆச்சர்யம் என்னவென்றால், நமீதா புடவை கட்டி வந்ததுதான்.

முதல்வர் கலந்து கொள்ளும் விழா என்ற நாகரீகம் கூட இல்லாமல், குட்டி பாவாடையோடு வந்து எல்லாரையும் தர்மசங்கடப்படுத்திய ஸ்ரேயா, ரஜினி, ஷங்கர் ஆகியோரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அந்த சம்பவத்திற்கு பின் இதுபோன்ற முக்கிய விழாக்களில் கலந்து கொள்வதையே தவிர்த்து வந்தார் ஸ்ரேயா. இந்த பிரச்சனை தொடர்பாக சட்டசபையிலேயே பேச்சு எழுந்தது. அப்போது நமீதாவின் ஆடை விஷயங்கள் பற்றியும் அங்கு விவாதிக்கப்பட்டது. ஆனாலும், தனது துணிக் கொள்கையில் 'துணி'ச்சலாகவே இருந்தார் நமீதா! இதுபற்றி கேள்வி கேட்ட நிருபர்களிடம் கூட, எனக்கு இதுதான் காற்றோட்டமாக இருக்கிறது என்று ஓப்பனாகவே பதில் சொன்னார் அவர்.

இந்த நிலையில் பெருமாள் பட விழாவுக்கு நமீதா எப்படி வருவார் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனாலும், முதல்வர் கலந்து கொள்ளும் விழாவுக்கு வருவதால், கண்ணியமாக ஆடை அணிந்து வர வேண்டும் என்று இயக்குனர் சுந்தர்சி கேட்டுக் கொண்டாராம். அதனால்தான் புடவை கட்டி வந்திருந்தார் நமீதா. அவரது இந்த தோற்றம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

-ஆர்.எஸ்.

hotnews
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter