யார் மனசுல யாரு என்பதே பெரும் குழம்பமாக நிலவி வருகிறது. நேற்றுவரை யார் யாருடனோ கிசுகிசுக்கப்பட்ட த்ரிஷா, இப்போது விஷாலைதான் காதலிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி கட் அண் ரைட்டாக பதில் சொல்லவேண்டிய விஷால், மத்திய அரசு பிழைக்குமா, கவிழுமா? என்ற பதட்டத்தில் இருக்கிறது நாடு.
இந்த லட்சணத்தில் விஷால் காதலிப்பது நயன்தாராவையா? திரிஷாவையா? என்ற விவாதம் தேவைதானா? இந்த வயசில் காதலிக்காமல் எந்த வயசில் காதலிப்பது? நான் த்ரிஷாவை காதலிக்கிறேன் என்றால் தைரியமாக ஆமாம் என்று சொல்லிவிடுவேன். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்கிறார்!
நானும் விஷாலும் பல வருடத்து நண்பர்கள். எங்கள் இரண்டு குடும்பமுமே நல்ல நட்போடு பழகி வருகிறது. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும் என்கிறார் த்ரிஷா. உண்டு, இல்லைன்னு சொல்றதை விட்டுட்டு இப்படி குழப்புனா, எப்படி எடுத்துக்கறதாம்... அதிருக்கட்டும். சத்யம் ரிலீஸ் ஆன கையோடு வெளிநாட்டுக்கு பறக்க போகிறார் விஷால்.
இத்தனை நாள் பட்ட கஷ்டத்தையெல்லாம் போக்கும் விதமாக ஜாலி டிரிப் அடிக்கவிருக்கும் அவர், இரண்டு மாதங்கள் இந்த ரெஸ்ட்டை தொடருவாராம். அதன்பின் சென்னை திரும்பும் அவர், தானே இயக்கும் புதிய படத்தில நடிக்கவிருக்கிறார். வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக, விஷால் போகிற நாட்டிற்கு த்ரிஷாவும் பறக்காமல் இருந்தால் சரி...
-பலராமன்
|