|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -
மாணவர்களுக்கு சொரணை வேண்டும்
நடிகர் சிவகுமார் சீற்றம்

சமீபகாலமாக தொடர்ந்து மாணவிகள்தான் முதல் மதிப்பெண் வாங்குறாங்க. Surya - Sivakumarமாணவர்களுக்கு சொரணை வேணும். இனிமேலாவது முதல் மார்க் வாங்கணும் என்றார் நடிகர் சிவகுமார். நடிகனுக்கு சமுக பொறுப்பு இல்லை என்று கூறும் பொறுப்பற்ற வார்த்தைகளை பொய்யாக்கிய நடிகர். தனது சம்பளம் ஆயிரங்களில் இருக்கும்போதே, அதில் கொஞ்சத்தை ஏழை மாணவ, மாணவிகளின் படிப்புக்கு கொடுத்தவர்.

மகன் சூர்யாவின் மேற்பார்வையில் நடந்து வரும் அகரம் பவுண்டேஷன் முலமாக இந்த வருடமும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வித்தொகை வழங்கினார். இதில் பார்வையற்ற மாணவிகளும் வந்திருந்தது நெகிழ்ச்சி. மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கும் மாணவர்கள் தவிர்த்து, ஒவ்வொரு பாடத்திலேயும் முழு மதிப்பெண் வாங்கியவர்களை அழைத்து கௌரவித்தார்கள். இவற்றுக்கு நடுவில் திண்டிவனத்தில், தாய் தமிழ் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் பேராசிரியர் கல்யாணிக்கு, இரண்டு லட்சம் நிதியுதவி அளித்தார் சூர்யா. விழாவில் முக்கியமான செய்தி ஒன்றையும் சொன்னார் சிவகுமார். மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து நல்ல மதிப்பெண்களை பெற்ற பாண்டி என்ற மாணவரை ஐ.ஏ.எஸ் படிக்க வைக்கிறாராம் சூர்யா.

அகரம் பவுண்டேஷன், இதுபோன்ற கல்வி உதவிகள் செய்வதோடு, குழந்தை தொழிலாளர்கள் மத்தியில் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் விதத்தில் ஒரு குறும்படத்தையும் வெளியிட்டிருக்கிறது. இது ஒவ்வொரு தியேட்டரிலும் அரசின் உதவியோடு திரையிடப்படுகிறது.

இந்த நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெறும் ஒவ்வொரு முறையும் சிவகுமார் வலியுறுத்துகிற விஷயம் ஒன்றே ஒன்றுதான். "கஷ்டப்பட்டு வளர்த்த அப்பா அம்மாவை அநாதை ஆசிரமத்திலோ, முதியோர் இல்லத்திலோ விட்டு விடாதீர்கள்." இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்ட சிவகுமார், "அப்படி முதியோர் இல்லத்தில் உங்க அப்பா அம்மாவை விட்டீங்கன்னா, உங்க வயசான காலத்திலே உங்களை குச்சியை வைத்து அடிப்பான் உங்கள் பிள்ளை. அதுதான் நடக்கும்" என்றார் காட்டமாக!

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter