பந்தயம் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது ரசிகர்கள் அறிந்த விஷயம்தான். வருகிற கொஞ்ச நிமிடத்திலும், நறுக்கென்று நாலு பஞ்ச் வசனங்கள் பேசுகிறாராம். படப்பிடிப்பில் இருக்கும் இவரை காண ரசிகர்கள் திரண்டு வருவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடத்தப்பட்ட படப்பிடிப்பில் நிஜமான விஜய் ரசிகர்கள் நடித்தார்கள். (ரஜினியின் குசேலனிலும் நிஜமான ரஜினி ரசிகர்கள் நடித்தார்கள் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்க)
படத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களில் அடுப்பை பற்ற வைத்து ஆவி பறக்க சமைக்கலாம். அந்தளவுக்கு சூடு...! 'நான் மக்களுக்கு நல்லது செய்வதற்காக வந்திருக்கேன். உன்னை மாதிரி அரசியலை வைத்து வியாபாரம் செய்யுற ஆள் நான் இல்லை' 'நான் பிறந்தது மதுரை, வளர்ந்தது திருப்பாச்சி, என்னை எங்க அப்பா வெறும் ஆம்பளையா மட்டும் வளர்க்கலை, கொம்பு சீவிய காளையா வளர்த்திருக்கார்' இப்படி வசனங்கள் இடம் பெறுகிறதாம்.
படத்தின் ஹீரோவான நிதின் சத்யா இந்த படத்தில் விஜய் ரசிகராக நடிக்கிறார்.
-டக்ளஸ் |