First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மாற்றுப் பாதையில் சேது திட்டத்தை செயல்படுத்த முடியுமா? பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை - தங்கக்காசு மோசடி திட்டம்: கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் மீது ஆயிரக்கணக்கானோர் தமிழக போலீசாரிடம் புகார் - பாரத மாதா நிர்வாணப்படம் வரைந்தது தொடர்பாக ஓவியர் உசேன் மீது தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி - மியான்மரில் புயலுக்கு பலி எண்ணிக்கை 1 லட்சம் ஆனது: 5,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதி இன்னும் தண்ணீரில் மிதக்கிறது - முன்னாள் அமைச்சர் தா.கிருட்டினன் கொலை வழக்கில் அழகிரி உட்பட 13 பேரும் விடுதலை சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிறையில் சமையல் கற்றுக் கொண்டேனா?
-நடிகை புளோரா வேதனை

ஐயோ பாவம் புளோரா! அமெரிக்காவிற்கு செல்ல போலி விசா பெற முயன்றதாக Floraஇவர் மீது புகார் கொடுக்கப்பட்டு கம்பியும் எண்ணிவிட்டு வெளியே வந்திருக்கிறார். பழைய டைரியை புரட்டிப்பார்த்தால் இன்பம். அதுவே வெளியே வந்து பழைய பத்திரிகைகளை புரட்டிப் பார்த்தால்? அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான் மிஞ்சியது அவருக்கு. சிறையில் இவர் சமையல் கற்றுக் கொள்கிறார் என்றெல்லாம் செய்திகள். எப்படிதான் இப்படியெல்லாம் எழுதுறீங்களோ? சொல்லும்போதே சிரிப்பு வருகிறது புளோராவுக்கு. நடந்தது என்ன என்பதை கதை மாதிரி விவரித்தவர், Flora“வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கேள்விகள் வேண்டாமே” என்றார். ஆனாலும், தெலுங்கு பத்திரிகையாளர்கள் புளோராவை சூழ்ந்து கொண்டார்கள். கேள்வி மேல் கேள்விக்கணைகள். தமிழில்தான் புளோரா பெரிய நடிகைகள் லிஸ்டில் இல்லை. ஆனால், தெலுங்கில் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவர். அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் இவர் மோகன்பாபுவின் உதவியாளர் ஒருவர் மீதும் குற்றம் சுமத்த, அதற்காகவே கேள்விக்கணைகளை வீசினார்கள் தெலுங்கு பத்திரிகையாளர்கள். நான் குற்றவாளி அல்ல. மோசடியில் ஈடுபடுகிற அளவுக்கு இழிவான பெண் அல்ல. நிரபராதி என்று நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். என்னை போல் யாரும் தேவையில்லாமல் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். கலை நிகழ்ச்சிக்கு அழைப்பவர்களிடம் சக நடிகர்-நடிகைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் புளோரா. அதில் எச்சரிக்கை உணர்வை விட பரிதாபமே மிஞ்சியிருந்தது.

-ஆர்.எஸ்.

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter