| பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரையில் தோன்றி மறுபடியும் தனது மார்க்கெட்டை நிலைக்க வைத்துவிட்டார் சுமன். சிவாஜியில் வில்லனாக நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் பிரகாஷ்ராஜ்தான். அந்நியன் படத்தில் தன்னை ஒரு எபிசோட் வில்லனாக்கியதில் வெறுத்துப் போன அவர், சிவாஜி படத்தின் வாய்ப்பை நிராகரித்தார். அதன்பின் அழைக்கப்பட்டவர்தான் சுமன். மறுபடியும் வில்லன் வாய்ப்பு வந்தால், அது பெரிய ஹீரோக்களுடன்தான் என்பதில் உறுதியாக இருந்த சுமன், சின்ன சின்ன வாய்ப்புகளை மறுத்து வந்தார். இந்நிலையில் அஜீத் நடிக்கும் ஏகன் படத்தில் கொடூர வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். கைநிறைய சம்பளமும் உறுதி என்பதால், அஜீத்தோடு மல்லுக்கட்டுகிறாராம் சுமன்.
|