| எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இமயங்களை விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் வசனம் எழுதும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறியிருந்தது. இதையடுத்து தான் இயக்கி வரும் அங்காடி தெரு படத்திலிருந்து ஜெயமோகனை விலகி கொள்ள சொல்லிவிட்டாராம் வசந்தபாலன். ஆனால், ஜெயமோகன் வசனம் எழுதிய நான் கடவுள் படம் சம்பந்தப்பட்டவர்கள் என்ன முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
|