இந்த வருடமும் சென்னையில் இல்லை ரஜினி. தன்னுடைய பிறந்தநாளில் அவர் ரசிகர்களை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் சென்னைக்கு வந்து அவருடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை பார்த்துவிட்டாவது திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு முறையும், ரசிகர்கள் சென்னைக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கிற மன்ற தலைவர் சத்தியநாராயணா கூட இந்த முறை அமைதியாகிவிட்டார்.
பெங்களூரில் குடும்பத்துடன் தன் பிறந்தநாளை கொண்டாடும் ரஜினி, இன்னும் சில வாரங்களுக்கு பிறகுதான் சென்னை திரும்புவாராம்.
இதற்கிடையில் அவர் தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் மன்றத்தை கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைக்க போகிறார் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. அவரும் எதையாவது செய்வார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
-ஆர்.எஸ்.
|