
தொலைக்காட்சி தொடர்கள் இல்லத் தரசிகளுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, உடல்நிலை சரியில்லாமல் படுத்து இருக்கும் வயதானவர்களுக்கு ஒரு பெரிய பொழுதுபோக்காகும். சன் தொலைக்காட்சி ஆரம்பித்த அன்றிலிருந்து இன்று வரை சீரியலுக்கு என்றாலே சன் டிவி தான் எனும் நிலை ஆகிப்போனது.
தனிமனித வாழ்க்கை குடும்பத்தில் பல்வேறு கஸ்டங்கள் இருக்கும். ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதை என்னவென்று தெரிந்துகொள்ளும் ஒரு ஆர்வம் இருக்கும். இது பழகிப்போன பஞ்சாமிர்தத்தை போல அனைவரும் அறிந்த விசயம் தான். இதே மனநிலை தான் சீரியலிலும் தொடர்கிறது.
சீரியலில் உள்ள நபர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது தங்கள் குடும்பத்தையே பாதித்தது போல் ஆகிறது. அந்த வகையில் ஒரு சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல்.
துளசி காதலித்து திருமணம் செய்து கொண்டவள், அவளது கணவனை காதலித்த பெண் இவளுக்கு எதிரியாகிறாள். அவளது சூழ்ச்சியால் கணவனை பிரிகிறாள். சேருவாளா மாட்டாளா என்பது தான் தற்போதைய ஹாட் டாப்பிக்..
எப்படியும் சேர்ந்திடுவா என்பது எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும். அது எப்படி என்பதை இனி வரும் தொடர்களில் தான் பார்க்க போகிறோம்…
-தாஸ்..,
|